7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் முக்கிய சலுகைகள்

Fri, 26 Feb 2021-9:50 pm,

LTC- க்காக (விடுப்பு பயண சலுகை) பெறப்பட்ட தொகைக்கு மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சம்பள வர்க்கம் வருமான வரி செலுத்த தேவையில்லை. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசு, கோவிட் -19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வருமான வரி விலக்கை அளித்துள்ளது. வைரஸ் இன்னும் இருப்பதால், 2018-21 என நான்கு ஆண்டு சுழற்சிக்கு மாத சம்பளம் பெறும் அனைத்து வரி செலுத்துவோருக்கும் இந்த வருமான வரி நிவாரணத்தை மையம் நீட்டித்துள்ளது. Photo: Reuters

 

லாக்டௌன் காலத்தில் (2020 மார்ச் முதல் மே வரை) திட்டமிடப்பட்ட எல்.டி.சி (விடுப்பு பயண சலுகை) பயணத்திற்காக மத்திய அரசு ஊழியர் (CGS) எடுத்த எல்.டி.சி முன்பணத்தை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக பயிற்சி மற்றும் பணியாளர் திணைக்களம் (DoPT) ஏற்கனவே அலுவலக மெமோராண்டத்தை (OM) வெளியிட்டுள்ளது. Photo: Reuters

தற்போதைய சூழ்நிலையில் NPS-ஐ அகற்றுவது சாத்தியமான ஒரு விஷயமாக கருதப்படவில்லை என்பதை மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது. 1.1.2004 அல்லது அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் தேசிய ஓய்வூதிய முறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் ஜே.சி.எம்-க்கு அளித்த பதிலில், நிதி அமைச்சகம், "வளர்ந்து வரும் கார்பஸ், விவேகமான முதலீட்டு விதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவை என்.பி.எஸ்ஸை ஒழுங்குபடுத்தும். பழைய ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடக்கூடிய மற்றும் ஒழுக்கமான மாற்று விகிதத்தை என்.பி.எஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று கூறியது. NPS மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் ஒப்பிடப்படுவதைப் பொறுத்தவரை, இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறுபட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 

பணியாளர் துறையின் சமீபத்திய தகவல்களின் படி, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது TA-வைக் கோர தங்கள் போர்டிங் பாஸ் அல்லது பயண டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை, ஒரு அரசு ஊழியர் தன் போர்டிங் பாஸை இழந்திருந்தால், அந்த சந்தர்ப்பத்திலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் பயணித்ததாக அறிவிக்கும் ஒரு சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பித்தால் போதும். பயணித்த ஊழியரின் இந்த சுய அறிவிப்பு இப்போது போதுமானது. முன்னதாக, அரசு ஊழியர்கள் தங்களது TA-வைக் கோர போர்டிங் பாஸ் மற்றும் பயண டிக்கெட்டுகள் அவசியமாக இருந்தன. சுய அறிவிப்பு படிவத்தில், பணியாளர் அவர் போர்டிங் பாஸ் அல்லது பயண டிக்கெட்டை இழந்துவிட்டதாகவும், அந்த காரணத்தால் TA கோருவதற்கு ஆதரவாக பில்களை சமர்ப்பிக்க முடியாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அவரவரது துறையின் தலைவர் (HoD) கையொப்பமிட்ட TA படிவத்துடன் ஊழியர் பில்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவின் கீழ், 7 வது CPC (மத்திய ஊதியக்குழு) ஊதிய மேட்ரிக்ஸின் கீழ் நிலை -10 க்குக் கீழே ஊதிய அளவைக் கொண்டுள்ள செயலாளர்களுக்கோ அல்லது கீழ்நிலை ஊழியர்களுக்கோ இது அவசியமாகும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால், மத்திய சிவில் சேவைகள் (தெளிவுபடுத்தல், கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1965 இன் கீழ் அரசாங்கம் அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஊழியர் அதில் அறிவிக்க வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link