Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்!

Fri, 26 Feb 2021-2:13 pm,

பழைய IFSC குறியீடு மற்றும் MICR குறியீட்டை மாற்றுமாறு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையென்றால், பழைய குறியீட்டைக் கொண்ட கணக்கு வைத்திருப்பவர்கள் 31 மார்ச் 2021 முதல் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது.

PNB-யில், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா (UBI) ஆகிய இரண்டு அரசுக்கு சொந்தமான வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1 ஏப்ரல் 2020 முதல் PNB-யுடன் இந்த வங்கிகள் இணைந்துவிட்டன. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது PNB-யுடன் இணைந்துவிட்டன. இந்த இணைப்பிற்குப் பிறகு, PNB, இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக மாறியுள்ளது. இதன் பின்னர், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது புதிய காசோலை புத்தகம் மற்றும் IFSC மற்றும் MICR குறியீட்டைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

வங்கி தனது ட்வீட்டில் இதற்கான கட்டணமில்லா எண்ணையும் பகிர்ந்துள்ளது. இந்த எண்ணில் அழைத்து இந்த விவரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெறலாம். இணைப்புக்குப் பிறகு PNB –யில் இணைந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இப்போது புதிய காசோலை மற்றும் புதிய IFSC குறியீட்டைப் பெற வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது.

இது தொடர்பான எந்தவொரு தகவலுக்கும், வங்கியின் கட்டணமில்லா எண்களான 18001802222/18001032222 என்ற எண்களில் அழைக்கலாம். பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பழைய IFSC குறியீடுகள் ஏப்ரல் 1 முதல் இயங்காது என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் அரசு இணைத்துள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைந்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link