நமக்கு தைப் பொங்கல்..மற்ற மாநிலத்துக்கு?..கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Thu, 12 Jan 2023-4:42 pm,

தமிழ்நாடு: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தாடை அணிந்தும், பானையில் பொங்கல் சமைத்து வழிபடுவார்கள்.

டெல்லி மற்றும் ஹரியானா: டெல்லி மற்றும் ஹரியானாவில் சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர். பண்டிகையில் நெய், அல்வா மற்றும் அரிசி பாயாசம் ஆகியவை முக்கிய உணவாக படைக்கப்படுகிறது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் மாகி என்கிற பெயரில் தங்கள் அறுவடை நாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இது சீக்கியர்களின் முக்கிய நிகழ்வாகும். பால், கரும்புச் சாறு, அரிசி பாயாசம் கட்டாய உணவாக இடம் பெறும்.

குஜராத்: குஜராத்தில் "உத்ராயண்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இங்கு பட்டம் விடும் நிகழ்ச்சி பிரபலமான திருவிழாவாகும். 1000த்திற்கும் மேற்பட்ட பட்டங்கள் விடப்படும். காய்கறிகள் நிறைந்த உணவுகள், பலகாரங்கள் படையலுக்கு வைக்கப்படுகிறது. 

 

ஹிமாச்சலப் பிரதேசம்: இங்கு ’மஹா சாஜி’ என்கிற பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். படையலில் இனிப்புக் கிச்சடி செய்வது முக்கிய உணவாகும்.

அசாம்: மாக் பிஹு, போகலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது, இது அசாமில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்

கர்நாடகா: கர்நாடகாவில் ’சுக்கி’ பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. கரும்பு முக்கிய இடம் பிடிக்கிறது. அதேபோல் ஏறு தழுவும் மாடுகளைக் கழுவி அதற்கு பொட்டு வைத்து வழிபடுவதையும் முக்கியமாக செய்கின்றனர்.

கேரளா: மகர விளக்குப் பூஜையை ஒட்டி இந்நிகழ்வு நடைபெறும். இதனால் மகர ஜோதி தெரிவது முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆந்திரா: ஆந்திராவில் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.இங்கு தமிழ்நாட்டை போலவே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம்.

மஹாராஷ்டிரா: மகார் சங்ராதி என பெருநாளைக் கொண்டாடுகின்றனர். அதிகாலை  நல்லெண்ணெய் தேய்த்து தலைக் குளிப்பதை முக்கிய வழக்காகக் கொண்டிருக்கின்றனர். அல்வா, லட்டு, போளி என பல இனிப்பு வகைகளை கடவுளுக்குப் படைக்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link