மகாலட்சுமியின் ஆசீர்வாதம் வேண்டுமா? இந்த பொருட்களை தூரப் போடுங்க!

Fri, 07 Oct 2022-12:19 pm,
goddess

சிலர் பழைய பாத்திரங்களை வைத்திருப்பார்கள். தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, உடைந்த அல்லது விரிசல் அடைந்த எஃகு, பிளாஸ்டிக், செம்பு பாத்திரங்களை அகற்றிவிடவும். இவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. 

diwali gift

நின்றுபோன கடிகாரம், வாஸ்து படி மிகவும் எதிர்மறையானது. அது, உங்கள் நல்ல நேரத்தை நிறுத்துவதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது. எனவே, வீட்டில் உள்ள கடிகாரம் சேதமடைந்தால், அதை சரி செய்து பயன்படுத்தவும், அல்லது வீட்டில் இருந்து அகற்றிவிடவும்  

Hindu

தீபாவளி என்பது ஒளியின் திருவிழா. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளியை நிரப்ப வேண்டும். ஒளி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பழுதடைந்த விளக்குகளை அகற்றிவிடவும்

தேவைக்கு அதிகமாக காலணிகள், செருப்புகள் இருக்கும்போது, வீணாகிப் போன காலணிகளையும் வீட்டில் வைத்திருக்கும் வாய்ப்பு உண்டு. இது அதிர்ஷ்டத்தை போக்கச் செய்யும். பயன்படாத மற்றும் பழைய செருப்புகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுங்கள்

உடைந்த சிலைகளை வீட்டில் வைக்கக் கூடாது

 

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்யும் போது மேற்கூறிய பொருட்களை அகற்றவும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee Media இதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link