சனி உச்சம் இன்னும் 100 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், மகா அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்

Sat, 03 Aug 2024-8:40 am,

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது சனி பகவானின் அருள் இருந்தால், அவர் வாழ்வில் எண்ணற்ற இன்பங்களை பெறுகிறார். அவரது முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சிக்கு யாரும் தடை போட முடியாது. 

 

சனி பகவான் கும்ப ராசி பெயர்ச்சி அடைந்த பிறகு தற்போது ​​ஜூன் 29 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார், இந்த பயணம் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த 104 நாட்களும் நிலுவையில் உள்ள வேலைகள், சிக்கிய பணத்தையும் வெற்றிகரமாக சில ராசிக்காரர்கள் பெறுவார்கள். அந்த ராசிகளைப் பற்றி காணலாம்.

 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பணம் பெருகும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவுபெறும். கடன் தொல்லை நீங்கும். சக ஊழியருடன் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறலாம். அலுவலக வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். வணிகத்தில் பெரிய நிதி லாபம் பெறுவீர்கள். மகிழ்ச்சியும் செழிப்பும் குவிவும்.

 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சனி பகவான் சிம்ம ராசிக்காரர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார்.  

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு உயர் படிப்பு, பிஎச்டி அல்லது ஆராய்ச்சி துறையில் வெற்றி கிடைக்கும். அடுத்த 104 நாட்களில் மிகப் பெரிய ஜாக்பாட் வாய்ப்பை பெறுவீர்கள். நேர்மறையான சிந்தனையால் வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, செல்வம் ஆகியவை குறைவில்லாமல் இருக்கும். 

 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் 15ம் தேதிக்கு முன் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெரும். வேலையில் வேகம் அதிகரிக்கும். சனியின் வக்ர பெயர்ச்சியால் குறைந்த முயற்சியில் இவர்கள் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.

 

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link