முதுகுவலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ உணவுகளில் இருந்து விலகி இருங்கள்!

Fri, 11 Nov 2022-5:47 pm,

உங்களுக்கு முதுகு மற்றும் கழுத்து வலி இருந்தால், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக முழு தானியங்களை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளான பீட்சா,  மற்றும் மைதா ரொட்டி ஆகியவற்றில் அதிக அளவில்  மைதா பயன்படுத்தப்படுகின்றன. இந்த உணவுகள் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து முதுகுவலியை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு முதுகுவலி இருந்தால், அதிக சர்க்கரை உள்ள இனிப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இனிப்பு சாப்பிடுவது வீக்கத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் உங்கள் எடையையும் அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால், முதுகு மற்றும்  கழுத்து வலி பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே தவிர்க்கவும்.

சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால்,  உங்களுக்கு முதுகுவலி பிரச்சனை இருந்தால், சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். neu5gc எனப்படும் ஒரு பொருள் சிவப்பு இறைச்சியில் காணப்படுகிறது. இது வீக்கத்தை ஏற்படுத்தும்.

 

முதுகு வலி இருந்தால் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை சாப்பிடுவதால் வீக்கம் ஏற்படலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை சாப்பிடுவது வீக்கம் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். இதனை சமையலில் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்கும் எண்ணெய்கள் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link