Ujjain: உஜ்ஜைன் மகாகாளேஷ்வர் காரிடார்: ஒரு பார்வை

Tue, 11 Oct 2022-12:06 pm,

மகாகாலேஷ்வர் நாட்டின் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் மிக முக்கியமான சிவன் கோயிலாகும். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள ருத்ரசாகர் ஏரியின் கரையில் அமைந்துள்ள=ஜோதிர்லிங்கங்களில் ஒன்று ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயில்  

இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். ஜோதிர்லிங்கங்களிலேயே இதுதான் ஒரே சுயம்புலிங்கம்

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலை ஒட்டி கட்டப்பட்டுள்ள 900 மீட்டர் நீளமுள்ள கோயில் நடைபாதையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

856 கோடியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் இதுவாகும். இரண்டு பெரிய நுழைவாயில்கள், மார்பிளில் செதுக்கப்பட்ட 108 அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான தூண்கள், நீர் ஊற்றுகள் மற்றும் சிவபுராணத்தின் கதைகளை சித்தரிக்கும் 50 க்கும் மேற்பட்ட சிலைகள் போன்றவை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

900 மீட்டர் நீளமுள்ள நடைபாதை, உஜ்ஜயினியில் உள்ள மகாகல் லோக், இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பெரிய தாழ்வாரங்களில் ஒன்றாகும். இந்த நடைபாதை பழைய ருத்ரசாகர் ஏரிக்கு அருகில் உள்ளது. புராதனமான மஹாகாலேஷ்வர் கோவிலைச் சுற்றியுள்ள மறுவடிவமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது புனரமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் இந்த வழித்தடத்தின் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ளனர்.

2017 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பழங்கால கோவில் கட்டிடக்கலை மூலம் வரலாற்று நகரமான உஜ்ஜைனின் புராதன பெருமையை மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link