‘வாழ்க்கையில் மறக்கமாட்டேன்’ பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு கோலி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Sun, 23 Oct 2022-11:25 am,

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் உலக கோப்பையில் மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

அதாவது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 15 பேர் கொண்ட அணியில் தோனி என்னை தேர்வு செய்தது மட்டுமல்லாமல் 3வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.

இப்போது இருக்கும் இளைஞர்கள் யாரும் அந்த வாய்ப்பை பெற முடிவதில்லை. இதனால் தோனியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

 

குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு தோனியுடன் எடுத்த புகைப்படத்தை எப்போதும் ரசித்து கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link