EPS Pension: PF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்... முழு லிஸ்ட் இதோ

Wed, 02 Oct 2024-4:16 pm,
Types of Pension under EPS 95

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முதுமையின் போது நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் பொதுவாக 58 வயதில் EPF ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார்கள். 

Employee Pension Scheme

58 வயதிற்குப் பிறகு, 10 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திலிருந்து ஓய்வூதியம் (Pension) கிடைக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல விதமான ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஓய்வூதியங்கள் பிஎஃப் உறுப்பினரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கின்றன. 

Superannuation Pension

ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அவரது வயது 58 ஆக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பணியாளர் விரும்பினால், அவர் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெறலாம். அதன் பிறகு பணியாளருக்கு ஆண்டுதோறும் 4% கூடுதல் விகிதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். 

EPS-ன் கீழ் நீங்கள் ஓய்வூதிய வயதுக்கு முன்னரே ஓய்வூதியம் பெறலாம். அதாவது இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு முன்பே ஓய்வூதியம் பெற முடியும். பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50 -க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் பட்சத்தில், பணியாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவான வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். இதைப் பெற, 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்ச வயது வரம்பான 50 வயது ஆகியவற்றை பூர்த்தி செய்யத் தேவையில்லை. 

இறந்த EPFO ​​உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு இந்த ஓய்வூதியம் நிதி உதவியை உறுதி செய்கிறது. இந்த அம்சத்தின் மூலம் உயிருடன் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கிறது. கணவன் / மனைவி துணையை இழந்த பிறகு அவர்களின் நிதித் தேவைகளை நிர்வகிக்க இது உதவுகிறது. EPS 95 இன் கீழ் குழந்தைகள் ஓய்வூதியம், இறந்த EPFO ​​உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவி வழங்குகிறது. குழந்தைகள் 25 வயதை அடையும் வரை மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 

ஊழியர் இறந்து, அவருக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்றாலோ, அல்லது, அவரும் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தலோ, ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர ஓய்வூதியம் அனாதையான குழந்தைகளின் வளர்ப்புக்கும் கல்விக்கும் உதவுகிறது.

EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், அந்த நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். EPFO போர்ட்டலில் ஈ-நாமினேட் செய்யலாம். 

இபிஎஃப் உறுப்பினர் இறந்து, ​​குடும்ப உறுப்பினர்களளும் (மனைவி, குழந்தைகள்) இல்லாமல், உறுப்பினர் யாரையும் ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்காமலும் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் சார்ந்திருக்கும் பெற்றோருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link