12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவங்களை அடுத்து, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 


அதில், மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் POCSO சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. 


வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க POCSO சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை விரைவில் கொண்டு வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இதையடுத்து, நேற்றைய தினம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று முதல் இச்சட்டம் அமல் ஆகும் வகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் அவர்கள் இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்!