கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபாலி படத்திற்கு பிறகு தற்போது அவர் ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். திரையுலகில் நீண்ட நாட்களாகவே நடிகைகளுக்கு பாலியல்
துன்புறுத்தல் இருந்து வருவது குறித்து நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு செய்திகள் வெளியானது. 


மேலும் சமீபத்திய டி.வி பேட்டி ஒன்றில் தமிழ் மொழிகளில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான அந்த நடிகர் எனது காலைத் தடவினார். நான் கோபமடைந்து அவரை அடித்துவிட்டேன் என அந்தப் பேட்டியில் ராதிகா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டிராகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் நீச்சல் உடையணிந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டார். அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.