தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமலை அடுத்து அரசியல் களத்தில் குதித்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் நடிகர் ரஜினி அவர்கள் வலுவான அடித்தள கட்டமைப்பை உருவாக்க தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


அந்த வகையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.



கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த நிர்வாகிகள் நியமன பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, கடந்த 10-ம் நாள் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து இன்று இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


இச்சந்திப்பின் போது ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்!