மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதை அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி அருண்ஜேட்லி பூரண குணமடைந்து பணிக்கு திரும்பும் வரையில்,  ரயில்வே அமைச்சராக உள்ள பியூஷ்கோயல், நிதித்துறையையும் இனி கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேவேலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வசம் இருந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை ஆனது, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரதோரிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்மிருதி இரானி ஜவுளிதுறை அமைச்சராக மட்டுமே நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு துறை இணை அமைச்சராக இருந்த எஸ்எஸ் அலுவாலியாவிடம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை  ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இந்தச் சூழலில் கடந்த மாதம் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 


பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.