கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த சனிக்கிழமை (17-ம் தேதி) குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்தியாவில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் தாஜ்மஹாலுக்குச் சென்று சுற்றிப்பாத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் 21 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்துக்கு உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று அவர்கள் வழிபட்டார்கள். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஜஸ்டின் ட்ருடோ.


இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் ஜஸ்டின் ட்ருடோ கலந்துகொள்கிறார்.


எந்த ஒரு நாட்டில் இருந்து பிரதமர் இந்தியா வந்தாலும் அரசின் சார்பாக வரவேற்ப்பு அளிப்பது இந்தியாவின் வழக்கம். ஆனால் இது வரைக்கும் அரசின் சார்பில் அவருக்கு வரவேற்ப்பு அளிக்கவில்லை. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


இந்நிலையில், நடிகர் மாதவன் அவருடன் சேர்ந்த எடுக்கபட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் அதை மரியாதையாகவும் நினைக்கிறேன். இந்த சுற்றுப்பயணத்தின் நீங்கள் மகிழ்சி அடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.