செல்பி எடுக்கவந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டமைக்கு நடிகர் சிவக்குமார் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின்போது சிவக்குமார் அவர்களுடன் செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவர் சிவக்குமார் அவர்களின் அனுமதி இன்றி செல்போனை அவர் முன் உயர்த்தினார். யாரும் எதிர்பாராத அந்த வேலையில் ரசிகரின் செல்போனை சிவகுமார் அவர்கள் தட்டி விட்டார். 



இந்த சம்பத்தினை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சிவகுமார் அவர்களின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சிவக்குமார் அவர்கள் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்...


இந்த வீடியோவில்... "ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அப்படிதான் நடந்து கொள்வார்கள். பிரபல கலைஞர் அதையெல்லாம் பொருத்து கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தவறு என நினைக்கும் பட்சத்தில் உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்!