இசையமைப்பாளர் அனிருத் ஜூன் மாதம் 16 மற்றும் 17-ம் தேதி லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 16-ம் தேதி லண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெம்ப்ளி அரேனா என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும் 17-ம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.


இதுவரை இந்த இடத்தில் ஒரு தமிழ்க் கலைஞர் கூட இசை நிகழ்ச்சி நடத்தியது இல்லை. இசையமைப்பாளர் அனிருத் முதன்முதலாக இங்கு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். 


இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து கவனித்து வருகின்றன.