வலைகள் விரித்து கூட மாட்டாத மீன்கள், கரடியின் வாயில் தேடி வந்து சிக்கியுள்ளது. ஓடும் நீரில் மீனை பிடித்தது என்பதெல்லாம், அந்த கரடிக்கே தெரிந்த வித்தை. ஏரி, குளங்களில் மணிக்கணக்கில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறோம். ஒரே ஒரு மீன் பிடித்துவிட்டால் போதும் என நினைப்போம். ஆறு, கடல் என்றால் மீனவர்கள் படகில் சென்று, வலை விரித்து மீன்களை பிடித்து வருவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மலைப்பாம்புடன் சாலையில் வலம் வந்த குடிபோதை ஆசாமி!


ஆனால் வேட்டை தெரிந்த இந்தக் கரடி, அசால்டாக ஓடும் நீரில் லாவகமாக மீனை கவ்வி எடுக்கிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. டிவிட்டரில் இருக்கும் அந்த வீடியோவில், வேகமாக ஒடும் நீரின் நடுவே கரடி நிற்கிறது. முதன்முறையாக வீடியோ பார்ப்பவர்கள், கரடி குளிப்பதற்காக நிற்கிறது என எண்ணத் தோன்றும்.



சில நொடிகள் கடந்த பிறகு திடீரென தண்ணீருக்கும் குனியும் கரடி, வாயில் மீனுடன் வெளியே வரும். அந்த மீனும் மிகப்பெரியதாக இருக்கிறது. கரடியின் இந்த சாமார்த்தியத்தை பார்த்த நெட்டிசன்கள், வித்தை தெரிந்த கரடி தான் என மெச்சுகிறார்கள். காட்டில் வாழும் விலங்கான கரடிக்கு, இதுகூட தெரியவில்லை என்றால், அது எப்படி? உயிர்வாழும் என சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது, கரடி கம்பீரமாக உள்ளது என்றெல்லாம் கமெண்ட் அடித்துள்ளனர். 


மேலும் படிக்க | குறி வைத்த சிங்கம், தப்பித்ததா காளை? நெஞ்சை பதபதைக்கும் வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR