Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இதுமட்டுமின்றி நம் மனதிற்கு திடமூட்டும் பல உண்மை சம்பவங்களையும் இந்த வீடியோக்கள் மூலம் நாம் காண்கிறோம். அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் செய்த அசாதாரண துணிச்சலான செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தனது வீட்டிற்குள் நுழைய முயன்ற மூன்று கொள்ளையர்களை அந்த பெண் தன்னந்தனியாக எதிர்த்துப் போராடியுள்ளார். மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பெயர் வாங்கி இருக்கவேண்டிய இந்த சம்பவம், அந்த பெண்ணின் அசாதாரண துணிச்சலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.  ஹரிகோபிந்த்புரா பகுதியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் கொள்ளயடிக்கும் நோக்குடன் ஒரு வீட்டிற்குள் புகுந்தனர். ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. ஏன்? என்ன நடந்தது என இங்கே காணலாம்.


தன் வீட்டு மொட்டை மாடியில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்த பெண், வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி மூன்று முகமூடி கொள்ளையர்கள் தங்கள் வீட்டில் நுழைய முயற்சிப்பதை காண்கிறார். உடனடியாக அவர் வேகமாக ஓடி வந்து, வாசல் கதவை அவர்கள் திறப்பதற்குள் அதை அழுத்தி பிடித்துக்கொள்கிறார். அந்த மூவரும் சேர்ந்து கதவை தள்ள, தன்னந்தனியாக அந்த பெண் மிகவும் முயன்று, தனது முழு பலத்தையும் போட்டு கதவை திறக்க விடாமல் செய்து, தாழ்ப்பாள் போடுகிறார். பின்னர், கதவை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், அருகில் உள்ள சோஃபாவை இழுத்து கதவுக்கு முன்னால் வைக்கிறார்.


இந்த முழு நேரமும், அவர் கத்தியபடி அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை அழைக்க முயற்சிக்கிறார். பின்னர் அவர் மொபைல் மூலம் தனது கணவரை தொடர்பு கொள்கிறார். இதற்கிடையில், கதவை திறக்க முடியாமல் பாடுபடும் கொள்ளையர்கள் பெண்ணின் அலறலை கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், அங்கிருந்து ஒடி விடுகிறார்கள். 


இந்த முழு சம்பவமும் வீட்டில் உள்ளும் வெளியிலும் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் செயல் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. அவரது, துணிச்சலும், சமயோஜித புத்தியும் நமக்கும் உத்வேகத்தை அளிக்கின்றது. 


மேலும் படிக்க | கரடியுடன் சண்டை போட்ட குத்துச்சண்டை வீரர்... இது என்ன புது விளையாட்டு!! - வைரலாகும் வீடியோ


கொள்ளையர்களிடமே கெத்து காட்டிய பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:


இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @gharkekalesh என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


'அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்ட வேண்டும்' என ஒருவர் எழுதியுள்ளார். 'பொதுமக்கள் இப்படி தைரியமாக இருந்தால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 'தன் அச்சத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் மூன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடிய அந்த பெண்ணுக்கு என் சல்யூட்' என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் ஸ்லோ-மோஷனில் நடந்த வாலிபர்! திக் திக் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ