வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே நடக்கின்றன. நாடு முழுவதும் பல இடங்களில் பல விதமான திருமண சடங்குகள் நடக்கின்றன. திருமனங்களின் பல சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றில் நடக்கும் சில வினோத நிகழ்வுகள் இணையவாசிகளை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.


அப்படிப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் குடையுடன் அக்னியை வலம் வருவதை காண முடிகின்றது. 


இணையத்தில் வெளிவந்துள்ள இந்த திருமண வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. திருமண சடங்குகளின் போது பலத்த மழை பெய்யத் தொடங்குவதை வீடியோவில் காண்கிறோம். மழை நிற்காமல் பெய்யவே, அது நிற்க காத்திருக்காமல் மணமக்கள் குடைகளை விரித்து தீயை வலம்வரத் தொடங்குகிறார்கள். 


இணையவாசிகளுக்கு பிடித்துப்போன வீடியோ:


தீயை வலம் வர வேண்டிய நேரத்தில் கனமழை பெய்யத் தொடகுகிறது. இதனால் மணமகன் கையில் குடையை பிடித்துக்கொண்டு மணமகளுடன் தீவலம் வருகிறார். குடையை பிடித்த படி கொட்டும் மழையில் மணமக்கள் இந்த சடங்கை செய்து முடிக்கிறார்கள். இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ஜஸ்ட் மிஸ்..மானை பதம் பார்க்க நினைத்த முதலைக்கு பல்பு: வீடியோ வைரல்


வினோதமான அந்த திருமண வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ giedde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், "அண்ணனின் அர்ப்பணிப்பைப் பாருங்கள்" என்று மாப்பிள்ளையை கிண்டல் செய்துள்ளார். “இந்த திருமணத்தை யாராலும் மறக்க முடியாது” என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 


சமீபத்தில் வைரல் ஆக மற்றொரு திருமணம்


இந்த திருமண வீடியோவின் துவக்கத்தில் மணமக்கள் மேடையில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது. மணமகன் யாருடனோ மிக ஆவீசமாக பேசிக்கொண்டு இருக்கிறார். மிக கோவமாக உள்ள அவர், மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால், அப்போது யாருக்கும் தெரியாமல், ஒருவர் மேடையில் ஏறுகிறார். அனைவரது கவனமும் மணமகனின் பேச்சில் இருக்கும் சமயம், அவர் மணமகளின் அருகில் சென்று அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்கிறார். அந்த நபர் குங்குமம் இட்ட உடனேயே மணமகள் நாற்காலியில் இருந்து எழுந்து அந்த நபருடன் செல்வதை வீடியோவில் காண்கிறோம். இது புரியாமல் இன்னும் 'குங்குமம் இட்டு மணம் முடிக்க மாட்டேன்' என வாக்குவாதம் செய்யும் மாப்பிள்ளையை பார்த்தால் பரிதாபமாகவும் உள்ளது, சிரிப்பும் வருகிறது. 


 



மேலும் படிக்க | சினேகாவுக்கு எக்ஸ்பிரசனில் டஃப் கொடுக்கும் சுட்டிக் குழந்தை - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ