வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னை மக்களை புரட்டிப்போட்டு ஒரு வழியாக சற்று ஓய்ந்திருக்கிறது. எனினும், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. மின்சார சேவையும், மொபைல் சிக்னலும் இன்னும் பல பகுதிகளில் கிடைக்காமல் உள்ளது. படிப்படியாக அரசு சேவைகளை மீட்டு வருகிறது. 


மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழைக்கு பிறகு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இந்த புயலில் விலங்குகளும் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. மக்களாகிய நம்மால் நம் பிரச்சனைகளை எடுத்துக்கூறி வாய் விட்டு உதவி கேட்க முடியும். ஆனால், வாயில்லா ஜீவன்களால் அதுவும் முடியாது.   


இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சிலர் படகில் சென்று நாய்களை காப்பாற்றுவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. 


சென்னையின் சில இடங்களில் முட்டி அளவும், சில இடங்களில் கழுத்தளவும் நீர் தேங்கிய நிலையில், சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்புக்குழுவினர் படகுகளில் சென்று மக்களை காப்பாற்றினர். அப்படி ஒரு படகில் சென்ற சிலர் ஓர் இடத்தில் இரு நாய்கள் மழையில் நனைந்து ஒடுங்கிக்கொண்டு இருப்பதை பார்க்கிறார்கள். இதை பார்த்து நாய்கள் அருகில் படகை கொண்டு செல்கிறார்கள். அதிலிருந்து ஒருவர் இறங்கி ஒவ்வொன்றாக இரு நாய்களையும் தூக்கி படகுக்கு கொண்டு வருகிறார். இந்த நிகழ்வு பார்ப்பதற்கு மிக நெகிழ்ச்சியாக உள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: சண்டையிட்டுக் கொண்ட சிங்கங்கள்... சைக்கிள் கேப்பில் தப்பிய எருமை!


நாய்கள் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி வீடியோவை இங்கே காணலாம்



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான X இல் @curse_introvert என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பகிர்ந்த நபர், 'மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது. மீட்புக்குழுவுகு நன்றி' என எழுதியுள்ளார். இந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள். 


மிக்ஜாம் புயல்


சமூக ஊடகங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய களேபரத்தை பார்க்க அனைவருக்கும் இருக்கும் ஆரவம் இயல்புதான். கழுத்தளவு நீரில் சிக்கித்தவித்த மக்கள், ஓடும் மழை நீரில் மிதந்த கார்கள், ஆங்காங்கே வீழ்ந்திருந்த மரங்கள், தீவுகளாக காணப்பட்ட தெருக்கள்... இவை அனைத்திற்கும் மத்தியில் அசராமல் பெய்த பேய் மழை!! இவை அனைத்தின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பதற்றத்தில் ஆழ்ந்த மனங்களை இளக வைக்க சில மீம்களையும், வினோத வீடீயோக்களையும் கூட காண முடிந்தது. அந்த வகையில் மழை நீரில் மீன் பிடித்த ஒரு நபரின் விடியோவும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | சீண்டும் குரங்கு...கூலாக கெத்து காட்டும் நாய்: இணையத்தை தெறிக்கவிடும் வைரல் விடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ