வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மனிதர்களின் வாழ்வில் மிருகங்களுக்கும் மிருகங்களின் வாழ்வில் மனிதர்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. ஒருவர் இல்லாமல் மற்றொருவரால் இருக்க முடியாது. 


சமூக ஊடகங்களில்  குரங்கும், யானை, நாய், பூனை ஆகிய சில மிருகங்களுக்கு எப்போதும் அதிக மவுசு உள்ளது. நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன. 


வீடுகள் மட்டுமல்ல, சமூகத்திலும் நாய்கள் நன்றியுள்ளவை, உதவும் பண்புள்ளவை என்பதை எடுத்துக்காட்டும் விடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிக அழகாகவும் இதயத்தைத் தொடும் வகையிலும் உள்ளது. இந்த வீடியோவில், ஒரு நாய்க்குட்டி ஒரு நபருக்கு மண்ணைத் தோண்டுவதில் உதவி செய்கிறது, அதனால் அதிகம் உதவ முடியவில்லை, ஆனால் அதன் சிறு முயற்சி கூட மிகப் பெரியதாகத் தெரிகிறது.


மேலும் படிக்க | 'ஏய் இங்கே பார்...ஏய் அங்கே பார்': புலிக்கு தண்ணி காட்டும் வாத்து, வேற லெவல் வைரல் வீடியோ


தொழிலாளிக்கு உதவிய நாய்


 வீடியோவில், ஒரு தொழிலாளி தரையில் வெட்டப்பட்டுள்ள குழிக்குள் நுழைந்து மண்வெட்டியால் மண்ணை வெளியே வீசுவதை காண முடிகின்றது. மேலே நின்று கொண்டிருந்த கறுப்பு நிற நாய்க்குட்டி ஒன்று அவர் வெளியே வீசும் மண்ணை இரண்டு முன் கால்களாலும் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அதன் கால்கள் மிகவும் சிறியவையாக இருப்பதால், அதிக மண்ணை அகற்ற முடியவில்லை. இருப்பினும், அது தன்னால் ஆன விதத்தில் மெதுவாக மண்ணை அகற்றி தொழிலாளிக்கு உதவுகிறது.


இந்த வீடியோ அந்த சிறிய நாய்க்கு இருக்கும் பெரிய உள்ளத்தை காட்டுகிறது. தன்னால் ஆன வகையில் அது அந்த நபருக்கு உதவ படும் பாடு படுகிறது. இந்த நாயிடம் இருந்து நமக்கு கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன. இந்த வீடியோ பார்ப்பதற்கே நெகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது.


மனதை உருக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது:


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம்கில், @goodnews_movement என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏராளமான லைக்குகளும் கிடைத்துள்ளன. பல இணையவாசிகள் இதற்கு நாயை பாராட்டி பல கமெண்டுகளையும் எமோஜிகளையும் அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | Viral Video: காதலிக்காக உயிரை விட்ட பறவை.... கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ