தெருக்களில் நடுமாடும்போது நாய்களின் தொல்லை தாங்க முடியாது. திடீரென ஏதாவதொரு சந்தில் இருந்து வரும் நாய், நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க ஓடும். அல்லது மிக சத்தமாக உழைத்து அவர்களை மேலும் செல்லவிடாமல் பயமுறுத்தும். நகரப் பகுதிகளில் அதிகம் இருக்கும் தெருநாய்களால் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டவர்கள் ஏராளம். இதனால், நாய்க்கு பயந்து கொண்டு நடந்து செல்ல அச்சப்படுபவர்கள் இன்றும் உண்டு. கடைக்கு செல்வதென்றால் கூட வண்டியை எடுத்துக் கொண்டு மட்டுமே செல்வார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கல்யாணமா இருந்தா என்ன, நமக்கு தூக்கம்தான் முக்கியம்: கியூட் மணமகளின் வைரல் வீடியோ


ஒரே ஒரு நாய் இருந்தால் கூட சமாளித்துவிடலாம் என நினைத்தால், அந்த நேரத்தில் சத்தமாக உழைத்து பல நாய்களை ஒன்று திரட்டிவிடும். அந்த நாய்களுக்கே தெரியாது எதற்காக நம்மை பார்த்து உழைக்கிறது என்று. அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும், அது எத்தகைய கொடூரமான சூழல் என்பது. தப்பித்தால் மட்டும் போதுமடா சாமி என எல்லா குறுக்கு வழிகளையும் யோசித்து, அந்த இடத்தை காலி செய்துவிடுவார்கள். அடுத்த முறை அந்த வீதி வழியே செல்ல நேர்ந்தால் முன்கூட்டியே உஷாராகிவிடுவார்கள். 



அப்படி, உஷாரான ஒருவர் தெரு நாய்களையே அலறவும் விட்டிருக்கிறார். கடிக்க வந்த நாய்களை தலை தெறிக்க ஓடவிட்டிருக்கிறார். அவர் செய்த காட்சி தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாகியுள்ளது. நாய்களின் தொல்லைக்கு ஏற்கனவே ஆளாகியிருந்திருபார் போலும். அதனால், மிக்கி மவுஸ் போல் உடை அணிந்து கொண்டு நாய்கள் இருக்கும் வீதி வழியே செல்லும் அவர், நாய்களை நோக்கி வேகமாக ஓடுகிறார். அவரைக் கண்டதும், நம்மை விட பெரிய விலங்கு ஒன்று வருகிறது என நினைத்து, குறைத்தபடியே நாய்கள் ஓடுகின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, பார்வையாளர்களுக்கு தானாக சிரிப்பு வருகிறது. இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க | பாம்பின் மரமேறும் சாகச வீடியோ: இப்படித்தான் மரம் ஏறனும்