மனிதர்களும் அலங்காரமும் பிரிக்கிமுடியாக ஒன்று, முற்காலத்தில் உடலை தாண்டி மட்டுமே அந்த அலங்காரங்கள் ஒரு எல்லையோடு இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் தங்கள் இயற்கை அழகினை மேலும் மெருகூட்ட பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி வருவதை பார்க்கின்றோம். நமக்கு முந்தைய தலைமுறையினர் மஞ்சல், குங்குமம், உதட்டுச்சாயம், சில வாசனை திரவியங்கள் என உபயோகித்து வந்தனர்.


பின்னர் நம் தலைமுறையினர் தங்களது உடலை சற்று வருத்திக்கொள்ள முன்வந்து மார்டன் ஆர்ட் எனப்படும் Tattoo போன்ற நிரந்தர அழகு சேதங்களையும் தங்களுக்குள்ளாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் நம் தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரால் பயன்படுத்தப்பட்ட புற அழகு சாதனங்களையும் விட்டுவிட வில்லை.



இந்நிலையில் தற்போது இந்த மாற்றங்கள் சற்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஆம் வரும் தலைமுறையின் கலாச்சாரம் முழுவதுமாக மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தங்கள் திருமணங்களில் அவர்கள் பயன்பத்ம் மோதிரத்திற்கு பதிலாக ’finger piercings’ எனப்படும் விரல் துளையிடல் என்னும் புதுப் பழக்கத்தினை கையாண்டு வருகின்றனர்.



என்னடா நாம் எல்லாம் திருமண மோதிரத்தில் துணைவரின் பெயரையை தானே பதித்தோம்! என பார்பதற்குள் அடுத்து இந்த வகையான கலாச்சாரத்தினை வரும் தலைமுறை பிரபலம் செய்து வருகிறது!