ராட்சச மலைப்பாம்பு ஒன்று நாயுடன் சண்டையிடும் வீடியோ இன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் எனும் பகுதியில் ராட்சச மலைப்பாம்பு ஒன்று கருப்பு நிற நாய் ஒன்றை கடித்து அதனை சுருட்டியுள்ளது. நாய் மலைப்பாம்பிடம் இருந்து மீள முடியாமல் அப்படியே அசைவற்று இருந்தது. இதை கண்ட மற்றொரு நாய் அந்த மலைப்பாம்பை கண்டு குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனைக் கண்ட இளைஞர்கள் சிலர் குச்சிய எடுத்து அந்த நாயை மீட்பதற்கு முயற்சித்துள்ளனர்.  


ஆனாலும் அந்த முயற்சியால் ஒரு பயனும் இல்லை. இதையடுத்து ஒரு இளைஞன் தைரியமாக மலைப்பாம்பின் வாலைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார். இதில், தனது பழத்தை இழந்த மலைப்பாம்பு சற்று தனது பிடியில் இருந்த நாயை பிடியிலிருந்து தளர்த்தியது. இதையடுத்து, மற்றொரு இளைஞன் தனது கையிலிருந்த குச்சியால் அதை மீட்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த நாயை மலைப்பாம்பு பயங்கரமாக கடித்து கொண்டிருந்துள்ளது. 


இதையடுத்து, அருகில் இருந்த வெள்ளை நாய் அந்த மலைப்பாம்பை கடித்துள்ளது. அப்போது நாயின் காலைப் பிடித்து ஒரு இளைஞர் தூக்கித் தள்ளினார். இதனால் விடுபட்ட நாய் பாய்ந்து ஓடியது. ஆனால் மலைப்பாம்பு சட்டென விரைந்து அதை மீண்டும் கவ்வியது. உடனே மலைப்பாம்பை தடுத்து, நாயை இளைஞர்கள் மீட்டனர்.


பின்னர் அந்த மலைப்பாம்பு வணபகுதியை நோக்கி சென்றது. இந்த வீடியோவானது சமூகவளைதலத்தில் விரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது....!