ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையம் வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் ஷில்பா-வினை சோதனை செய்துள்ளார். இத்தருணத்தில் அவர் ஷில்பாவின் நிறைத்தை குறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.


மேலும் ஷில்பாவின் லகேஜ் ஓவர் சைசாக இருப்பதாக தெரிவித்து அவரை பயணிக்க விடாமல் தடுத்துள்ளார். இதன் காரணமாக தான் பிடிக்க வேண்டிய மெல்போர் விமானத்தை ஷில்பா தவறவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தினை பதிவு செய்துள்ளார்.


இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...