இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத் : இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் வெளி உலகிற்கு தெரியாமல் நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாகின.



டிசம்பர் 16 அன்று திருமண வரவேற்பு ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளதாக செய்திகள் மற்றும் அழைப்பிதழ் இந்த மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியாகின. அதை தொடர்ந்து, இன்று சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. சாய்னா நேவால் ட்விட்டரில் "ஜஸ்ட் மேரீட்" என போட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



இதன் மூலமே வெளி உலகிற்கு இந்த திருமணம் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து வெளியே அதிகம் தெரியவில்லை. பலரும் டிசம்பர் 16 அன்று தான் திருமணம் என எண்ணினர். அடுத்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு விளையாட்டு, அரசியல், மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க பிரமாண்டமாக ஹைதராபாத் நகரில், டிசம்பர் 16 (நாளை) நடைபெற உள்ளது.


திருமணத்தின் போது, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாய்னா ட்விட்டரில் பதிவிட, அதை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.