நடிகர் ஜெயம் ரவி, அவரவிந்தசாமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தனிஒருவன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஜெயம் ராஜா அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தனிஒருவன். இயக்குநர் ஜெயம் ராஜா இப்படத்தினை இயக்க அவரது தம்பி ஜெயம் ரவி நாயகனாக நடித்தார், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனிஒருவன்-2 விரைவில் உறுவாக உள்ளதாக இயக்குநர் ராஜா அறிவித்துள்ளார்.



இதுகுறித்த வீடியோ ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு ஆகஸ்ட்-28 எல்லாருக்கும் தெரியும் தனிஒருவன் படத்தின் 3-வது வருடம். இது நாள் ஆக ஆக உங்கள் அன்பால் அந்த படத்தை பெருசா ஆக்கிட்டிங்க, ரொம்பா சந்தோஷமா இருக்கு.


அடுத்து நாங்க செய்யபோற படம் தனிஒருவன்-2 கண்டிப்பா ஒரு நல்ல படமாக தருவதற்கு நாங்கள் இன்னும் முயற்சிக்கிறோம். அதிகமாக கஷ்டபடுவோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.