வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 


தற்போது மிக விசித்திரமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஒரு புதுமணப் பெண் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி காவல் நிலையத்தை அடைந்தார். அதைத் தொடர்ந்து அங்கு ஒரு முழு நாடகமே அரங்கேறியது. இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இப்போது வைரலாகும் வீடியோவில், புதுமணப் பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, கலாட்டா செய்து, தனது காதலனை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு கோருவதைக் காண முடிகிறது. " நான் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வேன்” என்று அவர் இந்தி மொழியில் சொல்வதைக் கேட்க முடிகின்றது. 


மணமகள் குடிபோதையில் இருப்பதால் அவர் நிலையாக இல்லை என்பதும் வீடியோவை பார்த்தால் தெரிகிறது. அந்த பெண்ணை கட்டுப்படுத்த பெண் கான்ஸ்டபிள்கள் கடுமையாக முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் அடங்குவதாக தெரியவில்லை. மேஜை மீதிருந்த காகிதங்களையும், ஒரு மொபைல் போனையும் அவர் தூக்கி வீசுகிறார். சிவப்பு, தங்க நிறத்தில் புடவை அணிந்துள்ள மணமகளை, பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அறைக்குள் இழுத்துச்செல்வதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | ரெண்டு இட்லி கெட்டி சட்னி! ஸ்விக்கி்யில் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி பார்சல் வாங்கியது யார்?


போதையில் கலாட்டா செய்த மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவை ட்விட்டரில் தீபிகா நாராயண் பரத்வாஜ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை 39,000 வியூஸ்களும், ஏகப்பட்ட லைக்குகளும் 268 -க்கும் மேற்பட்ட ரீட்வீட்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


"அவரது கணவரின் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், “இந்தப் பெண்ணின் உடலில் மஞ்சுலிகா புகுந்துவிட்டார். இரண்டென்ன, இருபது திருமணங்கள் செய்துகொள்ளலாம்.” என கிண்டல் செய்துள்ளார். “இதற்கு முன்னரே அவர் காதலனை திருமணம் செய்திருக்கலாம்” என எழுதியுள்ளார். 


இதற்கிடையில், ஒரு சில நெட்டிசன்கள் மணமகளுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துள்ளனர். விருப்பம் இல்லாத நபருடன் அவருக்கு திருமணம் செய்து வைத்ததற்காக அவர்கள் அந்த பெண்ணின் தாய் தந்தையை விமர்சித்து குற்றம் சாட்டினர். 


ஒரு பயனர், “அவர் குடிபோதையில் இருக்கிறார். ஒருவேளை அவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததால், இப்படி அவர் ஆகியிருக்கலாம். இதற்கு பெற்றோர்களும் பொறுப்பு” என கூறியுள்ளார். “அந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் வேறு ஒருவருடன் கட்டாயத் திருமணம் நடந்துள்ளது. நடந்த விஷயத்தை தெரிந்துகொள்ளாமல் பெண்ணை மட்டும் குறை கூறுவது சரியல்ல” என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | ‘அப்படி என்ன உனக்கு கோவம்?’: தூங்கிய நபரை புரட்டி எடுத்த குரங்கு, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ