ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை சுமார் 1 கிமி தொலைவிற்கு தனது தோளில் தூக்கி சென்ற காவலர் இந்திய மக்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த வாலிபரை, காவலர் ஒருவர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.


மத்திய பிரதேசம் மாநிலத்தின் ராவண் பிபால்கான் என்ற ஊருக்கு அருகே சென்ற ரயில் ஒன்றில் இருந்து அஜித் என்ற 20 வயது வாலிபர் கீழே விழுந்தார். பலத்த காயத்துடன் தண்டவாளத்தில் விழுந்துகிடந்த அஜித் பற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரி புனம் பில்லூர் என்பவர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தார்.



சாலை வசதி இல்லாத நிலையில், தாமதிக்காமல் அந்த வாலிபரை தோளில் சுமந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.


வாலிபரை காவலர் தனது தோளில் தூக்கி சென்ற இச்சம்பவத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.