படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு சென்ற நடிகை ராதிகா ஆப்தேவிற்கு லிப்டில் பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், பிரகாஷ் ராஜ் நடித்த தோணி படம் மூலம் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவரும் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் இவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான வலியால் துடித்த ராதிகாவிடம், படப்பிடிப்பு முடிந்தபின்னர் அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் ஹோட்டலில் தன்னிடம் எல்லைமீற முயற்சித்துள்ளார். இதனை வெளிப்படையாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார் ராதிகா.


மேலும், ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.