விலங்குகளை வைத்து வித்தை காட்டி சம்பாதிக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. சிங்கம், புலி, கரடி என காட்டில் இருக்கும் கொடிய விலங்குகள் கூட சர்க்கஸ் கூடாரத்தில் மாஸ்டர்கள் சொல்வதை கேட்டு அதனை அப்படியே செய்யும். இதனால், இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கிறது. கரடி, சிங்கம், புலி, யானை எல்லாம் ஆக்ரோஷமான விலங்கு என்றாலும், சர்க்கஸ் கூடாரத்தில் தாவுவது, குதிப்பது, தொப்பியை தூக்குவது, ஒற்றைக் காலில் நடப்பது என்ற வித்தைகளை எல்லாம் செய்யும். இதற்கு ஒரு கட்டத்தில் எதிர்ப்பும் எழத் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3 கொள்ளையர்களை தன்னந்தனியாக விரட்டி அடித்த சிங்கப்பெண்: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ


அதாவது காட்டு விலங்குகளை கூட்டி வந்து சர்க்கஸ்களுக்காக சொல்வதை கேட்குமாறு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. விலங்குகள் மாஸ்டர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்பதற்காக உணவு கொடுக்காமல் இருப்பது, அடிப்பது, கடுமையாக துன்புறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆதாரப்பூர்வமாகவும் நிரூப்பிக்கப்பட்டன. இதனால் சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.




இது ஒருபுறம் இருக்க, சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகள் செய்யும் இந்த வித்தைகள் எல்லாம் வியப்பாகவும், கண்களை கவருபவையாகவும் இருக்கும். அதேநேரத்தில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு இடையே சில சமயங்களில் விலங்குகள் தங்களின் பூர்வீக குணாதிசயங்களுக்கு திடீரென திரும்பும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. சிங்கம், சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது திடீரென ஆக்ரோஷமாகி மாஸ்டர்களை கடித்து கொன்றிருக்கின்றன. இதேபோல் புலியும் மாஸ்டர்களை வேட்டையாடி இருக்கின்றன. யானை சர்க்கஸ் மாஸ்டரை மிதித்து கொன்றிருக்கிறது. இந்தவரிசையில் கரடி ஒன்று சர்க்கஸ் நிகழ்சயின்போது மாஸ்டரை திடீரென கடித்து குதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜாலியாக நடந்து சென்று மாஸ்டரின் உத்தரவுப்படி ஆடிக் கொண்டிருந்த கரடி, என்ன நினைத்ததோ தெரியவில்லை சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த மாஸ்டரை நோக்கிச் சென்று அவரை கடித்து குதறுகிறது. இதனைப் பார்த்த அங்கிருந்த மக்களும், சக மாஸ்டரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சக மாஸ்டர் கரடியை தூர செல்லுமாறு அடித்து உதைத்தாலும் கடித்த மாஸ்டரை விடமாட்டேன் என கடிக்கிறது. நிச்சயம் அந்த மாஸ்டருக்கு உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போது இந்த அதிர்ச்சி வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ