Viral Video: பாம்பின் வீடியோகளுக்கு இணையத்தில் பஞ்சமில்லை. பாம்பு வேகமாக ஊர்ந்து செல்வதை போலவே பாம்பு வீடியோக்களும் வேகமாக வைரல் ஆகின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும், பாம்புகளின் வீடியோகளுக்கென இணையவாசிகளிடன் ஒரு கிரேஸ் உள்ளது. தற்போது ஒரு பாம்பின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதுவும் மிக வித்தியாசமான ஒரு வீடியோதான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில், ஒரு பெண்ணுக்கும் பாம்புக்கும் இடையிலான விசித்திரமான உறவைக் காண முடிகின்றது. இதை நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வைரலாக பரப்பினாலும், இது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. வீடியோவில், ஒரு இளம் பெண் பாம்புடன் அளவுகடந்த அன்பை பரிமாறி, மிகவும் அசாதாரணமான முறையில் பாம்புடன் பழகுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோவில் என்னதான் இருக்கிறது?


வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் பாம்பை கைகளில் பிடித்துக் கொண்டு தனது அன்பை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை காண்கிறோம். அவர் பாம்பை தன் செல்லப் பிராணியைப் போல அன்புடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பெண் பாம்புக்கு முத்தம் கொடுக்கிறார். பெண்ணின் இந்த அன்புக்கு பாம்பும் சரியான ரியாக்ஷனை அளிக்கின்றது. இது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. பாம்பு சிறுமியின் கன்னங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து அவளை முத்தமிடுவது போல் லேசாக தொட முயற்சிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகின்றது. பாம்பின் முகத்தில் பெண்ணின் மீதுள்ள பாசம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 


பெண் காட்டிய அன்புக்கு பாம்பின் வேற லெவல் ரியாக்ஷனை இங்கே காணலாம்:




மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் miss_exotics என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


சிலர் இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இது இயற்கை அழகு என்றும் உயிரினங்களின் மீதான அன்பின் எடுத்துக்காட்டு என்றும் கூறி வருகிறார்கள். மறுபுறம், சிலர் இது மிகவும் ஆபத்தானது எனறு எச்சரிக்கிறார்கள். பலர் இதை பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்று கூறி இதுபோன்ற செயல்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். சிலர் பாம்புடன் இதுபோன்ற நடத்தை குறித்து கவலை தெரிவித்ததோடு, பெண்ணின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


நிபுணர் கருத்து


இத்தகைய பாம்புகளுடன் அருகாமை மற்றும் அன்பு காட்டுவது ஆபத்தானது என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். பாம்புகள், குறிப்பாக காட்டு பாம்புகள், நம்ப முடியாதவை என்றும் அவை எப்போது வேண்டுமானாலும் மனிதர்களை தாக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த வகையான நடத்தை மனிதர்களுக்கு மட்டுமல்ல, பாம்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | ரயிலில் ரொம்ப கூட்டம் இருந்தால்... இனி இதை செய்யுங்க - நிம்மதியா தூங்கிட்டு போகலாம் - வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ