Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ ஆகும். இதில் பேராசையால் உந்தப்பட்டு அவதிப்படும் பாம்பை நாம் காண்கிறோம்.


ஒரு பாம்பு ஒரு பைப்பில் இருக்கும் முட்டையை சாப்பிட எண்ணி, தெரியாமல் முழு பைப்பையும் விழுங்கி விடுகிறது. அதன் பின்னர் அது அதை வெளியே எடுக்க முடியாமல் மிக அவதிப்படுகின்றது. பரிதாபமான நிலையில் இருக்கும் அந்த பாம்பை ஒரு இளைஞர் காப்பாற்றுகிறார். அந்த பாம்பு படும் அவஸ்தையை பார்த்து அதை எப்படியாவது இந்த வேதனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என பெரும் முயற்சி எடுக்கிறார்.


வயிற்றில் பெரிய பைப் இருக்கவே, பாம்பின் வயிறு வீங்கி காணப்படுகின்றது. இளைஞர் ஒரு கம்பி கொண்டு பாம்பின் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்து அந்த பைப்பை வாய் பக்கம் மெதுவாக தள்ளுகிறார். இறுதியாக பாம்பு மற்றும் இளைஞனின் முயற்சி பலன் அளிக்கின்றது. பைப் பாம்பின் வாய் வழியாக வெளிவருகிறது. பைப்பில் பாம்பு ஆசைப்பட்ட முட்டையும் காணப்படுகின்றது.


பாம்பை காப்பாற்றிய இளைஞரின் வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | சர்க்கஸ் கூடாரத்தில் நடந்த அதிர்ச்சி, வித்தை காட்டியவரை கடித்து குதறிய கரடி - வைரல் வீடியோ


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bibeesh_p.b என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவு இந்த வீடியோ மூலம் தெரிகிறது’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘பாம்பின் பேராசைதான் பிரச்சனைக்கு காரணம்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அந்த இளைஞரை வெகுவாக பாராட்ட வேண்டும்’ என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ