அழகிய பறவைகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். அன்றாட டென்ஷ்களை போக்க இவை அருமருந்தாகும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல அரிய செய்திகளை வழங்குகின்றன. அந்த வகையில் தற்போது குட்டிக் கரணம் போடும் புறா ஒன்றின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் குட்டுக்கரணம் போடுவது என்பது அனைவரும் அறிந்ததே. விலங்குகளில் மனிதர்களை போலவே நடந்து கொள்ளும் குரங்கு குட்டிக் கரணம் போடுவதையும் பலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் இங்கே புறா குட்டிக்கரணம் போடுவதை பார்த்து, இணைய உலகம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புறா குட்டுக்கரணம் போடும் வீடியோ, why you should have an animal
@shouldhaveanima என்ற கணக்கில் பகிரப்பட்டு இணைவாசிகளை பெரிதும் கவர்ந்து வைரலாகி வருகிறது. இதுவரை 29.6  மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. புறா, தனது இறக்கைகளை விரித்து மிக நேர்த்தியாக குட்டிக்கரணம் போடுகிறது. ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல, மூன்று முறை குட்டிக்கரணம் அடிப்பதைக் காணலாம். 


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:



 


வீடியோவைப் பார்க்கும் போது, ​​பறவை  இதற்காகவே பயிற்சி எடுத்துள்ளதை போல தெரிகிறது.  ஆம் புறாவை பார்த்தால், இதற்காக நன்றாக பயிற்சி பெற்றத்தைப் போல் தான் தெரிகிறது.  14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், புறா ஒவ்வொரு முறை குட்டிக் கரணம் போட்ட பிறகும் தரையில் சரியாக, ஒரு தேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் போல  தரையில் கால்களை ஊன்றி நிற்பதைக் காணலாம். 


இதே போன்று, சில நாட்களுக்கு முன் பறவைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்பதை நிரூபிக்கும் வகையில், பறவை வீடியோ ஒன்று வைரலாகியது. அதில்  இலைகளை குடையாக பயன்படுத்திக் கொண்டு, மழையிலிருந்து, வெயிலில் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் அந்த சின்னஞ்சிறிய பறவைகள், நம்மை அதிசயத்தில் ஆழ்த்தின. வைரலாகிய வீடியோவில், சின்னஞ்சிறிய பறவை ஒன்று தனது அலகின் இலையை ஸ்டைலாக பிடித்துக் கொண்டு குடை போல் தன்னை வெயிலில் இருந்தும், மழையில் இருந்து காத்துக் கொள்வதைக் காணலாம் இது பார்ப்பவரை நிச்சயம்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். சின்னஞ்சிறிய பறவையின் மூளை இத்தனை வேலை செய்கிறதா என நினைக்கத் தான் தோன்றுகிறது.காணக்கிடைக்காத அதிசய வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:


மேலும் படிக்க | Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்!


சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரல் ஆகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் ரசிகரிகளை பெரிதும் ஈர்க்கின்றன என்றால் மிகையில்லை.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ