திருடர்கள் ஆனால் காதலர்கள்! ஆம் ஒரு காதல் ஜோடியின் கடைசிநிமிடப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. காரணம் இந்த புகைப்படம் இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சற்று முன் எடுக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போனி பார்கர் மற்றும் க்ளைட் பாரோ தான் அந்த காதல் ஜோடி. 13 கொலை வழக்குகள், பல திருட்டு வழக்குகள் இவர்கள் மீது இன்னும் நிலுவையில் உள்ளது. 
1930-ஆம் ஆண்டு டெக்சாஸில் இவர்கள் சந்தித்ததாக நம்பப்படுகிறது. இந்த கடைசிப் புகைப்படத்தில் இவர்கள் இருவரும் மிசோரிஸில் முத்தமிட்டுக்கொள்வதாக தெரிகிறது.



1932 முதல் 1934 வரைகுட்பட்ட இரண்டு வருடங்களில் இவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளினால் பார்கர் மற்றும் பாரோ பிரபலமான திருடர்களாக உருமானர்.


இந்த கொள்ளைகார தம்பதியினர் அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கு, வங்கிகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தினை பதித்துள்ளனர்.