ரயில் பெட்டிக்கும் நடைமேடை தளத்திற்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் அவை மரணத்தில் முடியும். ஆனால் ரயில்வே பாதுகாப்பு படை சேர்ந்த கான்ஸ்டபிள் வினோத் சிண்டே ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 14 ஆம் தேதி மும்பை பன்வேல் ரயில் நிலையத்தில், வேகமாக சென்றுக்கொண்டிருந்த ரயிலில் பயணி ஏற முயன்றபோது, கை நழுவியாதல்,  கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது அங்கிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் வினோத் சிண்டே, ஆபத்தில் இருக்கும், அந்த நபரை காப்பாற்ற, அவர் மீது பாய்ந்து காப்பாற்றினார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் உயிரை பணயவைத்து, ஆபத்தில் இருந்த நபரை காப்பாற்றிய வினோத் சிண்டேவின் துணிச்சலை பலர் பாராட்டி வருகின்றனர். 


வீடியோ: