ஒவ்வொரு விலங்குக்கும் இருக்கும் புத்திசாலித்தனத்தைப் போல, யானைக்கு என்று சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அது ஓவியம் வரையும் என்று யாருக்கும் தெரியாது. இதுவரை தெரிந்திருக்கவும் வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் பேனா பிடித்து, ஒரு போர்டில் ஓவியம் வரையலாம் என்ற எண்ணமெல்லாம் அதற்கு எப்படி தெரியும்?. ஓவியம் என்று ஒன்று இருக்கிறது என்பதாவது தெரியுமா? என்பதே கேள்விக்குறி. இப்படி தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், எல்லோரையும் வியக்கவைக்கும் வகையில் ஒரு வெள்ளை போர்டில் யானை ஒன்று பிரத்யேகமாக ஓவியம் வரைகிறது. அதுவும் செம அழகாக வரைக்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் யானையே தன்னுடைய உருவமான யானை உருவப்படத்தை மிகவும் அழகாக வரைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’கடவுளே என்ன காப்பாத்திரு’ குழந்தையிடம் தப்பிக்க அப்பா போட்ட பிளான்: வைரல் வீடியோ


கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ சற்று வியப்பாக தான் இருக்கும். ஆனால், இதனை நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும். யானை ஒன்று பேனா பிடித்து, அதன் முன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு போர்டில் சூப்பராக ஓவியம் வரைகிறது. இதெல்லாம் சாத்தியமா? என்பதை வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும். நிச்சயமாக நீங்கள் வியப்பின் உச்சத்துக்கு செல்வீர்கள். அந்த வீடியோவில், பேனாவை எடுக்கும் யானை, பிரபலமான தேர்ச்சி பெற்ற ஓவியர் போல், அதனை பிடித்து பெயிண்டில் நனைத்து வரையத் தொடங்குகிறது.



என்ன தான் வரைகிறது என பார்த்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய உருவத்தையே வரையத் தொடங்குகிறது. கண், வால் எல்லாம் கச்சிதமாக வரைந்து, காண்போரை வியப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. DailyLoud என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். தோராயமாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ டிவீட் செய்திருக்கிறார்கள். அத்தனை பேரும் தங்களின் வியப்பை பதிவு செய்திருக்கிறார்கள். கமெண்ட் அடித்திருக்கும் சிலர், இதனை எங்களால் நம்பவே முடியவில்லை. இதெப்படி சாத்தியம், மனிதர்களால் கூட இவ்வளவு அழகாக வரைய முடியாது. யானையின் அறிவையும், கிரகித்துக் கொள்ளும் தன்மையையும் கொண்டு நாங்கள் வியக்கிறோம் என்றெல்லாம் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். 


மேலும் படிக்க | வாழைப்பழம் திருடி சாப்பிட்ட மாணவருக்கு வந்த சோதனை...! ரூ.1 கோடி முடிஞ்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ