ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. காலை நேர வெப்பநிலை மிக குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. 


குல்லு மாவட்டத்தில் சோலங்க் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டன. வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளும் பனியால் சூழப்பட்டுள்ள நிலையில் மரம்,செடி, கொடிகள் மீது பனி படர்ந்துள்ளது. 


காணும் இடமெல்லாம் பனியால் போர்த்தப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.