புதுடெல்லி: கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 2023 செப்டம்பர் 24 அன்று 18:26 மணிக்கு நடைபெறும். ஜோதிட சாஸ்திரங்களின்படி, கிரகங்களின் போர்வீரராக கருதப்படும் செவ்வாய், ஆண்பால் இயல்பு கொண்ட ஒரு ஆற்றல்மிக்க கிரகம், இதன் அதிபதி முருகன். கன்னி ராசியில் செவ்வாய் கிரகம் அஸ்தமாகும்போது பல்வேறு ராசிகளுக்கும் அதன் தாக்கம் இருக்கும். செவ்வாய், கன்னியில் இருக்கும்போது,  நம்பிக்கை, தாராள மனப்பான்மை, ஊக்கம், கவர்ச்சி, உறுதிப்பாடு, சக்தி, பிடிவாதம், பெருமை ஆகியவற்றைக் கொடுக்கும் என்று பொதுவாக சொல்லலாம். உற்சாகம், தைரியம், நம்பிக்கை, விளையாட்டுத்தனம், பெருமை ஆகியவற்றின் கிரகம் செவ்வாயின் பெயர்ச்சி பலருக்கும் வெவ்வேறுவிதமான பலன்களைத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னி ராசியானது, பொறுமை, அமைதி, நிதானம் உட்பட பல அம்சங்களை குறிப்பது. வீரியமான செவ்வாய் கிரகம், அமைதியான கன்னியில் சென்று அஸ்தமாகும்போது கலவையான பலன்களைத் தருகிறது. கன்னி ராசிக்கு செல்வதால், செவ்வாயின் சஞ்சலத்தன்மை அதிகரிக்கும்.


கன்னி ராசியில் வரும் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது,12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும், பொதுவாக உயர் அதிகாரம் கொண்ட கிரகமாக அறியப்படும் செவ்வாய் ஒருவரின் வாழ்க்கையில் வலுவாக இருந்தாலும், செவ்வாய் அஸ்தமனமானாலும் வாழ்க்கையில் அனைத்து அத்தியாவசிய திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வலுவான மனதையும் வழங்கும்.


ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அந்த நபர் தனது தொழிலில் எல்லா நற்பெயரையும், பதவியையும் பெறலாம். அதோடு, வலுவான செவ்வாய், குருவின் பார்வையையும் பெற்றால் நிம்மதியாக இருக்கலாம்.  


மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு குருவால் அதிசய நிகழ்வு.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்


ஆனால், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களுடன் செவ்வாய் இணைந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும். உடல்நலக் கோளாறுகள், மனச்சோர்வு, அந்தஸ்து இழப்பு, பண இழப்பு என வாழ்க்கையில் நிம்மதியிஐ இழக்க நேரிடும். பொதுவாக செவ்வாயின் தோஷங்களை குறைக்க, செவ்வாய் காயத்ரி மந்திரம் மற்றும் அனுமன் துதியை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்.


விரைவில் கன்னி ராசியில் செவ்வாயின் பிரவேசம் யாருடைய வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும்? எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.24 செப்டம்பர் அன்று கன்னி ராசிக்கு சென்று அஸ்தமனமாகும் செவ்வாய்  கிரகத்தின் அமைப்பும் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது.


கன்னியில் செவ்வாய்: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்


 


மேஷம்
மேஷ ராசிக்கு அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் அது ஆறாவது வீட்டில் அமைந்துள்ளது. தற்போது கன்னியில் செவ்வாய் ராசி அஸ்தமாவது, மேஷ ராசிக்காரர்களுக்கு பல சவால்களை உருவாக்கப் போகிறது. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வணிக வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். தனிப்பட்ட உறவுகளிலும் சிக்கல்கள் எழலாம். கணபதியின் இளையோன் அறுமுகனை வணங்கினால் பிரச்சனைகள் குறையும்


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் அஸ்தமனமாவது சாதகமற்றதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற முடியாது, பணியிடத்தில் மனதிருப்தி இருக்காது. பிறரின் தவறுக்கு உங்களை காரணமாக்கும் முயற்சிகளும் நடக்கும் என்பதால், கவனமாக இருக்கவும். அதேபோல, உங்களால் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். வேலையில் மனம் ஒன்றாது என்பதால் ஒட்டுமொத்தமாக அதிருப்தியே மனதை ஆக்ரமிக்கும். செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் வருமானமும் குறையும்.  


மேலும் படிக்க | குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார்


கடக ராசி


செவ்வாயின் கன்னிப் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தராது. இந்த நேரத்தில்,  முயற்சிகளில் தடைகள் மற்றும் சாத்தியமான தோல்விகளை சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்குப் பிறகும் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். இந்த நேரத்தில் பல வகையான சவால்கள் எழலாம். பயணங்களிலும் கவனம் தேவை.


சிம்மம்


செவ்வாய் நான்காவது மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் கிடைக்கும். கன்னியில் செவ்வாய் நுழைவதால், நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் அதில் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை, இதனால் கவலைகள் அதிகரிக்கும். வேலையிலும் பிரச்சனைகள் வரலாம், பல தடைகள் உங்கள் பாதையில் முட்டுக்கட்டையாக மாறலாம். பசியுடன் இருப்பவருக்கு உணவிடுவது சரியான பரிகாரமாக இருக்கும்.


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும் நேரம் இது. பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடி இருக்காது. எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற, கடினமாக உழைக்க வேண்டும். விரும்பிய முடிவுகள் வேண்டுமானால், திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏழரை சனியை கடக்க அருள் புரியும் விநாயகரின் அருள் எந்த ராசிக்கு? 6 ராசிகளுக்கு நிம்மதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ