ஜோதிட சாஸ்திரத்தின் படி, சாரதா நவராத்திரியின் அஷ்டமி நாள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. தீமைகளை அழித்து உலகை உய்வித்த அன்னையை அஷ்டமி நாளில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானது. இந்த ஆண்டு, மகா அஷ்டமி நாளில் வானில் உள்ள கோள்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் சில தற்செயல் கிரக சேர்க்கை நடக்கவிருக்கிறது. அது, சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியின் மகா அஷ்டமி அன்று 'மகா சனியோகம்' உருவாகவிருக்கிறது, 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும், இதுவரை இல்லாத அளவுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும், வாழ்க்கையில் வசந்தம் வருவதற்கான பாதைகள் திறக்கும் என்று சொன்னால் அது மிகையானதாக இருக்காது. இந்த முறை மகா அஷ்டமி அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று, சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் ரவி யோகம் என இருபெரும் யோகங்கள் உருவாகின்றன. தற்செயலாக உருவாகும் இந்த யோகங்கள் ஒரே நாளில் வருவதால், 12 ராசிகளின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்றாலும், அதில் மூன்று ராசிகளுக்கு கலக்கலான வாழ்க்கை அமைய, இந்த யோகம் வேலை செய்யும். 


அஷ்டமியில் உருவாகும் யோகங்களால் வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்...


மேஷம்
நவராத்திரியின் அஷ்டமி நாள், மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கும். வெளியில் சிக்கியிருந்த பணங்கள் வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சிக்கல்களில் இருந்து வெளிவர அஷ்டமி நாளன்று உருவாகும் யோகம் உதவும். நிதி நிலை வலுவாக உதவும் கிரக சேர்க்கையால், வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும் பொன்னான வாய்ப்பையும் பெறலாம்.


மேலும் படிக்க | திருப்பதி லட்டு சர்ச்சைக்கு மத்தியில் தங்கக் கொடிமரம் சேதம்! ஏழுமலையானின் கொடிமரத்துக்கு என்ன ஆச்சு?


கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மகா அஷ்டமி சாதகமான பலன்களைத் தரும். தொழில் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உருவாகும், அதில் நல்ல லாபமும் வரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த மன உளைச்சலில் இருந்து வெளியில் வரும் நேரம் இது. குடும்பத்தினருடன் புரிதல் உருவாகும்.


கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரோதி ஆண்டு துர்கா அஷ்டமி சிறப்பாக அமையப் போகிறது. வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். முதலீடு செய்ய திட்டமிடுவதற்கான நேரம் இது. இப்போது நீங்கள் செய்யும் முதலீடுகளால், எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைப் பெறலாம். குடும்ப உறவுகள் வலுவடையும். பெற்றோருடனான உறவு வலுவடையும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்


பொறுப்புத் துறப்பு


(இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சக்தியைக் கொண்டாடும் நவராத்திரி வந்தாச்சு! கோலகலமாய் கொலுப்படிகளை அமைக்க ஏற்ற நேரம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ