Guru Sukra Serkai in Rishabam Rashi: ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் சுப யோகம் உருவாகிறது. இந்த யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசியில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும் | Gajalakshmi Rajayogam will be formed in Taurus:
ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி, குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி (Guru Peyarchi Palangal) அடையப் போகிறார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுகங்களை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரனும் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும். இந்த ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனாககருதப்படுகிறது, இது பணியிடத்தில் வெற்றியைத் தரும் மற்றும் நிதி நிலைமையை மேம்படுத்தும். எனவே இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Venus Transit 2024: சுக்கிரன் பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்..!


1. மேஷம் (Aries Zodiac Sign): ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் தரும். பொருளாதார நிலை மேம்படும். எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். சிக்கிய பணம் திரும்ப வரலாம். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம், பதவி உயர்வுடன் சம்பளமும் உயர்வும் கூடும். பணியிடத்தில் வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கை மேம்படும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆசியுடன் புதிய வேலையைத் தொடங்குவீர்கள்.


2. மகரம் (Capricorn Zodiac Sign): ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை மேம்படும். நீங்கள் தனிமையில் இருந்தால், ஒரு பார்ட்னரை பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகளை பெறலாம். மாணவர்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் பெறலாம்.


3. கும்பம் (Aquarius Zodiac Sign): குரு மற்றும் சுக்கிரன் இணைவது கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வாகனம் அல்லது சொத்தின் உரிமையாளராக முடியும். தொழிலதிபர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட உங்களின் ஒப்பந்தம் முடிவடையும், நல்ல லாபமும் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இப்போது அதற்கான லாபத்தைப் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் குறையும். சமூகத்தில் மரியாதை கூடும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Guru Udhayam Palangal: மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ