Lucky zodiacs of Jupiter & Saturn Transit: கிரகங்களின் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும், சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் காணப்படுகின்றன. தற்போது சனி தேவர் சதய நட்சத்திரத்தில் இருக்கிறார். அதன் பின் அவர் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இது தவிர குரு பகவான், சூரியன் செவ்வாய், கிருத்திகை மிருகசீரிஷம் மற்றும் ரோகினி நட்சத்திரங்களில் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், குறிப்பாக சனி மற்றும் குரு பகவானின் நிலையினால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் ஏற்படும். சனி பகவானின் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில், நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிபகவான் குருவின் அருளால் வாழ்க்கையில் இன்பங்கள் அனைத்தையும் பெறப்போகும் சில ராசிகள்


மிதுன ராசிக்கான பலன்கள்


மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குரு பகவானும் போட்டி போட்டுக் கொண்டு, அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். இதனால் மிதுன ராசியினருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள  உயர்வு என அனைத்தும் கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களும் அங்கீகாரங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை இனிதாக கழியும்.


சிம்ம ராசிக்கான பலன்கள்


சிம்ம ராசிக்காரர்களுக்கு நேரமும் வாய்ப்பும் மிகவும் சாதகமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வேலை, வியாபாரம் என அனைத்து விதத்திலும் வருமானம் பெருகும். பண தட்டுப்பாடு என்பது இருக்காது. வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்வதன் மூலம் மனதில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். சனி பகவானின் அருளால், நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.


மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!| 


தனுசு ராசிக்கான பலன்கள்


தனுசு ராசியினருக்கு சனிபகவான் பரிபூரண ஆசியையும் அருளையும் வழங்குவார். சனி போல் கெடுப்பாரும் இல்லை, சனி போல் கொடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். அதற்கேற்ப, இதுவரை ஏழை நாட்டு சனியின் காரணமாக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து வந்த தனுசு ராசிகள், அதிலிருந்து விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழத் தொடங்குவார்கள். நிதி நெருக்கடிகள் அனைத்தும் தீர்ந்து, மனதில் நிம்மதி பிறக்கும். சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நீடித்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்.


சனி பகவானுக்கான சில பரிகாரங்கள்


கருமத்திற்கு ஏற்ற பலன்களை கொடுக்கும் சனி பகவான், பிறரை மகிழ்விக்கும் வகையில், நற் செயல்களை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கிறார்.. அவர்கள் நல்வாழ்வும், செல்வமும் வளமும் பெற்று முன்னேறுவார்கள். எனவே சனி பகவானை மகிழ்விக்க, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும். எறும்புகளுக்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருளை பரிபூரணமாக பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ