ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த குரோதி ஆண்டில் இன்று கணபதிக்கு சதுர்த்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் 3 நாட்களும், வட மாநிலங்களில் 10 நாட்கள் வரையும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் புராணம், ஸ்கந்த புராணங்களின்படி, விநாயகப் பெருமான் பிறந்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும். ஆனால், விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு, விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளாமல், நீரில் கரைத்து விடுவது வழக்கம்.


விநாயகரை, நீரில் கரைப்பதால், அவர், தனது பெற்றோரான சிவனும் பார்வதியுடன் சென்று அவர்களது வீட்டில் ஒன்றாக வசிப்பார்கள் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகரின் சிலைகளை வீட்டில் வைத்து பூஜித்த பிறகு, அவற்றை பொது நீர்நிலைகளில் கரைப்பது நீண்ட காலமாக தொடரும் வழக்கம். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, பிளாஸ்டாப் பாரிஸ் பொருளை பயன்படுத்தாமல் விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.


மேலும் படிக்க | சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது


களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி, விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க (விநாயகர் விசர்ஜனம்) செய்ய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.


www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் பதிவேற்றப்பட்டுள்ளது. விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.


விநாயகரை கரைப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி பூஜை முடிந்த பிறகு,மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாளில் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கலாம். விநாயகரை நீரில் கரைப்பதை விசர்ஜனம்  என கூறுகின்றனர். உதாரணமாக, இன்று சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்றால், திங்கட்கிழமை அல்லது புதன்கிழமையில் நீரில் கரைக்கலாம். 


விநாயகரை நீரில் கரைக்கும் போது, ராகு காலம் ,எமகண்டம் ஆகிய நேரங்களை தவிர்ப்பது நல்லது, அதேபோல் மாலை ஆறு மணிக்கு மேல் விநாயகரை நீரில் கரைக்கக் கூடாது.  நீர் நிலைகளில் கரைக்க முடியாதவர்கள், ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் விநாயகரின் சிலையை கரைத்து செடி கொடிகளில் ஊற்றிவிடலாம்.


மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார விநாயகர் : அம்பானி குடும்பம் கொடுத்த 20 கிலோ தங்கம் கிரீடம்


10 நாட்கள் வரை விநாயகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளவர்கள், செப்டம்பர் 17-ம் தேதி அன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, இந்தியா முழுவதுமே மிகவும் பிரபலமானது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது கணபதி சதுர்த்தியாகும்.


விநாயகர் சிலையை நிறுவும் வரை விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விநாயகப் பெருமான் முழுச் சடங்குகளுடன் வழிபடப்படுகிறார். பின்னர் அனந்த் சதுர்தசி நாளில், விநாயகரை மக்கள் நீர்நிலைகளில் கரைக்கின்றனர். பண்டல் அமைக்கப்பட்டு, பத்து நாட்களும் கோலாகலமாக பூஜைகள் செய்து விநாயகரை வழிபடுவது வழக்கம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ