கடக ராசியில் சுக்கிரனின் கோச்சாரம் 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப, அசுப பலன்கள் காணப்படும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் செல்வத்தையும் ஐஸ்வர்யத்தையும் அளிப்பவராகக் கூறப்படுகிறார். இந்த ராசியில் ஆகஸ்ட் 31 வரை சுக்கிரன் இருக்கப் போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கப்போகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னி:


ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சுக்கிரன் கிரகம் கன்னி ராசிக்கு 11ஆவது வீட்டில் சஞ்சரித்துள்ளது. இந்தப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், அவை லாபம் தரும். ஊடகம், திரைப்படம், வங்கி அல்லது பேஷன் டிசைனிங் துறையுடன் தொடர்புடையவர்களும் இந்த காலகட்டத்தில் பயனடைவார்கள். இந்த காலம் வணிகம் மற்றும் தொழிலில் நம்பிக்கையான வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். இது தொழில் மற்றும் வியாபாரத்தில் செல்வத்தை கொண்டு வரும் காலம். இந்த ராசிக்காரர்கள் மரகதம் மற்றும் ஓபல் அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 


மேலும் படிக்க | இந்த 5 ராசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார் புதன் 


துலாம்: 


துலா ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சியால் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த இடம் வணிகம் மற்றும் வேலையின் வீடாக கருதப்படுகிறது. 31 மாதங்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு விருதுகள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவது நன்மை தரும்.


சிம்மம்: 


ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன்  சிம்ம ராசிக்காரர்களுக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரித்துள்ளார். இது செல்வம் மற்றும் பேச்சாற்றலின் இடமாகக் கருதப்படுகிறது. பல புதிய துறைகள் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். திடீர் பண ஆதாயமும் கூடும். 


நீங்கள் வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. லாபமும் இந்த கலாகட்டத்தில் அதிகரிக்கும். கூட்டு வேலை தொடங்க இது நல்ல வேளை. குறிப்பாக பணம் சம்பாதிக்க இது சாதகமான காலமாக இருக்கும். வழக்கறிஞர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Personality by Zodiac Sign: அஷ்டாவதானியாக திகழும் ‘இந்த’ ராசிக்காரர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ