திரிகோண ராஜயோகம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி, ஆகஸ்ட் மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் பல கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய அஸ்தமன நிலைகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிட நிகழ்வுகளாகும். ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மெற்பட்ட கிரகங்கள் சேரும்போது சில ராஜயோகங்கள் உருவாகின்றன. பொதுவாகவே ராஜயோகங்களின் உருவாக்கம் அனைவருக்கும் சுப பலன்களை அளிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்டில் உருவாகும் ராஜயோகங்கள்  


ஆகஸ்ட் மாதத்தில், 2 மிகவும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகங்களின் உருவாக்கம் மிகவும் மங்களகரமான பலன்களைத் தருகிறது. கேந்திர திரிகோண ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம் ஆகியவை ஆகஸ்டில் உருவாகின்றன. இந்த ராஜயோகங்கள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகங்கள் அமையும் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் அன்பு, பணம், பதவி, கௌரவம் என அனைத்தும் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் அமைவது சுப பலன்களை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்


கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாவதன் தாக்கம் அனைத்கு ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  


மேஷ ராசி: 


மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இந்த ராஜயோகம் இவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைத் தரும். உயர் பதவி, கௌரவம் ஆகியவை கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையில் அன்பின் அதிகரிப்பு இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 


கடக ராசி


கடக ராசிக்காரர்களுக்கு திரிகோண ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். நீங்கள் சில புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும். சவால்கள் வரும் ஆனால் நிலைக்காது. அவற்றை உறுதியுடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பண வரவு பெருகும். செல்வம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் இனி ‘இந்த’ ராசிகள் கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி தான்!


துலாம் ராசி: 


திரிகோண ராஜயோக பலன்களால் துலாம் ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்கும். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். சமூகத்தில் உங்கள் புகழும் பெருமையும் அதிகரிக்கும்.  புகழ் பெறுவீர்கள். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். தனியாக இருப்பவர்களுக்கு துணை கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 


மகர ராசி:


மகர ராசிக்காரர்களுக்கு திரிகோண ராஜயோகம் மிகவும் அதிக பலன்களை அளிக்கும். இவர்கள் இந்த காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். வாகனம் சொத்து வாங்கும் யோகம் இப்போது உள்ளது. இந்த காலத்தில் முன்னர் செய்திருந்த முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். பல நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உங்களின் புகழ் உயரும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராகு தோஷம் நீங்க சரியான நேரத்தில் இந்த பரிகாரம் செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ