வியாபாரம் செழிக்க


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மனிதனும் ஒரு தொழிலை தொடங்க நினைத்த உடன் துவங்க முடியாது. அதற்காக  இதுவரை சேமித்த பணம் நம்முடைய உழைப்பு, நேரம், என அனைத்தையும் தியாகம் செய்தால் மட்டுமே வியாபாரம் என்ற ஒரு விஷயத்தை நம்மால் முழுமையாக செய்ய முடியும். அப்படி செய்தும் அந்த வியாபாரம் சரி வர நடைபெறவில்லை என்றாலும்,  சில இடங்களில் வியாபாரம் நன்றாக நடக்கும் ஆனால் அங்கு பணம் தங்காமல் செலவழிந்து கொண்டே இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் இந்த ஒரு எளிய பரிகாரம் செய்து இந்த நிலையை மாற்றலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | லாட்டரி..இன்று முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


மகாலட்சுமியின் பரிகாரம்


எந்த ஒரு இடத்திலும் பணவரவை அதிகரிக்க வேண்டும் என்றால் அங்கு முதலில் நமக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளும், ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும். இந்த அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு எந்த நாளில் செய்தால் விசேஷமாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கும்படி மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.


எப்படி செய்ய வேண்டும்?


இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு சிறிய மண் குடுவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் கொஞ்சம் கல் உப்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், அனைத்தையும் வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி அதை மண் குடுவையில் போட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த குடுவை நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் கல்லா பெட்டியில் வைக்க முடிந்தால் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால்அங்கு சாமி படத்தின் முன்பு இதை வைத்து விடுங்கள். இப்போது முதலில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அதில் போட வேண்டும். அதன் பிறகு தினம் தினம் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அதில் போட வேண்டும். நீங்கள் நாணயம் போடும் போது அதன் சத்தம் வெளியே கேட்க வேண்டும். 


பண வரவு அதிகரிக்கும்


முதலில் போடும் போது சத்தம் கேட்காது. நாணயம் சேர சேர சத்தம் கேட்கும். இந்த சத்தமானது உங்கள் வியாபார இடத்தில் கேட்க கேட்க பணத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி தாயாருக்கு எப்போதும் இந்த சில்லறை காசுகளின் சத்தங்கள் மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் இந்த ஐந்து ரூபாய் நாணயம் குபேர சம்பத்து உடையது. இந்த இரண்டும் ஒரே நேரத்தில் சேரும் பொழுது அந்த இடத்தில் பணவரவு அதிகரிக்கும்.


லாபம் கொட்டும்..!


இதில் ஒரு நாளைக்கு ஒரு நாணயம் மட்டும் தான் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு அதில் நாணயங்களை சேர்க்கலாம். அதே போல் இந்த மண் குடுவை பரிகாரத்தை வீட்டிலும் செய்து பண வரவை அதிகரிக்க செய்யலாம். வியாபாரம் செய்யும் இடத்தில் இந்த பரிகாரமானது கூடுதல் பலனை கொடுக்கும்.


மேலும் படிக்க | வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, தொட்டதெல்லாம் துலங்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ