இரண்டரை ஆண்டுகளில் ஒருமுறை சனி பெயர்ச்சி நடக்கிறது. மற்ற கிரகங்களை விட இந்த கிரகம் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இதனால் 12 ராசிகளிலும் சனி பெயர்ச்சி ஆக 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் சனி அதன் சொந்த ராசியான கும்பத்தில் பிரேவேசித்துள்ளார் மற்றும் வக்ர நிலையிலும் உள்ளது. எனவே 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்தார். இப்போது சனி பகவான் பிற்போக்கு இயக்கத்தைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் நுழைவார்கள். இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் செழிப்பு உண்டாகும் என்பதை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

6 மாதங்கள் சனியின் அருள் கிடைக்கும்


ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். அவர்கள் பெரிய பதவி உயர்வைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமானது. சனியால் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். பணம் சாதகமாக இருக்கும். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும், இது அவர்களின் நிதி நிலைமையை பலப்படுத்தும். பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, போதுமான அளவு வங்கி இருப்பு உருவாகும் என்று கூறலாம்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அதிகப் பணத்தைத் தரும். அவர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பல இடங்களில் இருந்து பணம் கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கலாம். சிக்கிய பணத்தை மீட்க முடியும். தொழிலதிபர்களுக்கும் நேரம் லாபகரமாக இருக்கும். அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்யலாம். 


மீனம்: மீன ராசிக்காரர்களுக்குப் பிற்போக்கான சனியின் சஞ்சாரம் நிதிப் பலன்களை ஏற்படுத்தி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் வருமானம் உண்டாகும். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களின் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுத்தித் தரும். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தங்களைச் செய்யலாம். இந்த முறை பதவி உயர்வு, பணம், கௌரவம் அனைத்தும் உங்களை வந்து சேரும். சுப வாக்குவாதங்களில் வெற்றி கிடைக்கும்.


3 ராசிக்காரர்களுக்கு இன்னல்


கும்பம்- மகர ராசியில் சனி நுழைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வீட்டில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள், இல்லையெனில் தேவையில்லாத பிரிவினை ஏற்படும். பட்ஜெட்டை பார்த்து செலவு செய்யுங்கள். 


துலாம்- சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை கொடுக்கலாம். அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். தேர்வு மற்றும் நேர்காணல் கொடுப்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 


மிதுனம்- மகர ராசியில் சனியின் பிரவேசம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொல்லைகளைத் தரும். அவர்கள் பணத்தைப் பெறுவார்கள், ஆனால் அதிகரித்த செலவுகள் அவர்களைச் சேமிக்க அனுமதிக்காது. குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனை வரலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR