மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா - திமியா பாபோஸ் இணை தோல்வியடைந்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா மற்றும் திமியா பாபோஸ் இணை தோல்வியடைந்தது.


இப்போட்டியில், ரோகன் போபண்ணா - ஹங்கேரியின் திமியா பாபோஸ் இணை, கனடாவின் கேப்ரியலா தாப்ரோவ்ஸ்கி - குரோசியாவின் மேத் பவிக் இணையை எதிர்த்து விளையாடியது.


பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 2-6 6-4 [11-9] என்ற செட் கணக்கில் கேப்ரியலா தாப்ரோவ்ஸ்கி - குரோசியாவின் மேத் பவிக் வெற்றி பெற்றது!