IPL 2019 தொடரில் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 18-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இப்போட்டியில் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 26(24) ரன்களில் வெளியேற, டூப்ளசிஸ் 54(38) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவர்களை தொடர்ந்த களமிறங்கிய ரெய்னா 17(20) ரன்களில் வெளியேறிய போதிலும் அணித் தலைவர் டோனி 37*(23) மற்றும் அம்பத்தி ராயுடு 21*(15) கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தனர். 


இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். பஞ்சாப் அணி தரப்பில் லோகேஷ் ராகுல் 55(47) மற்றும் சர்ப்ரஸ் கான் 67(59) ரன்கள் குவித்தனர். எனினும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி குவித்தது. 


இதனையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சென்னை அணி 8 புள்ளிகள் பெற்று IPL புள்ளிபட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.