போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரர். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.


இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி 2-வது இடத்தையும், நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.


5வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.